இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே மற்றும் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் ஆகியோருக்கு அமைச்சரினால் பணிப்புரை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வீதிகள் நிர்மாணிக்கப்பட்ட பல வருடங்களாகியும் இவ்வாறு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளிலுள்ள வீதிகள் தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எனவே, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் கட்டிட ஆய்வு நிறுவன நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த வீதிகள் தொடர்பாக ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் அறிவுறுத்தியுள்ளார். (ceylonmail.lk)
No comments:
Post a Comment